தமிழர் வரலாற்றில் அத்தி மரத்துக்கு மிகப் பெரிய முக்தியத்துவம் கொடுக்கப்படுகிறது. அத்தி மரத்தில் செய்யப்பட்ட விஷ்ணு சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் 42 வருடத்துக்கு ஒருமுறை தரிசனத்துக்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. அப்படிப்பட்ட அத்தி மரத்தினுடைய சிறப்பு பற்றி ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி, இந்த அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு வித்தியாசமானது. சுக்ராச்சாரி நேரடியாக யாரிடமும் மோத மாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி, அதேபோல இந்த அத்தி மரத்தைக் குறித்து, ‘கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்’ என்று பழமொழி உண்டு. அதாவது, காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதைப் பார்க்க முடியாது. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.
கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவு, சிக்கல்கள் இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், ஜாதகத்தில் சுக்ரன் கெடுபலனால் அவதிப்படுபவர்கள் - நடைமுறைப் பரிகாரமாக வீட்டில் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்க்கலாம். இதனால் சண்டை, சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் இணக்கமான சூழல் உருவாகும். அத்தி மரத்திலிருந்து உண்டாகக் கூடிய வைப்ரேஷன் கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்
அத்தி மரப் பலகையில் அமர்ந்து தியானம் செய்வதால் பூமியினுடைய புவி ஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், நாம் உச்சரிக்கும் மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.