உத்தரப்பிரதேசம், முசாபர் நகர் மாவட்டத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள சுகஸ்தல் தலம்தான் முதல் பாகவத் பீடமாகும். இங்கு தினமும் பாகவத் சப்தாஹம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுகப்பிரம்மம் பரீட்சித் மகாராஜாவுக்கு ஏழு நாட்கள் பாகவதக் கதையைக் கூறிய புகழ்பெற்ற திருத்தலம் இது என்று சுகமகாத்மியம் என்ற நூலின் மூலம் அறியலாம்.