பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
02:04
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று (ஏப்., 2ல்), சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரம் நடந்தது. தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, மாலையில், பால், பண்ணீர், தேன், சந்தனம், குங்கும், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:30 மணிக்கு, நந்திக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ் வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷ நிகழ்ச்சி நடந்தன. அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு பல்வேறு திரவிய பொருட் களால் அபிஷேகம் நடந்தது. அதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள, ஸ்ரீ வாணீஸ் வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில் மற்றும்தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.