பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று முன்தினம் (ஏப்., 2ல்) மாலை, 5:00 மணிக்கு பிரதோஷ பூஜையில் பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், தயிர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக வழிபாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதன் பின், ரிஷப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.