பதிவு செய்த நாள்
17
ஏப்
2019
03:04
பெ.நா.பாளையம்: மாரியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டம் கோலகலமாக நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, சமயபுரம்
மாரியம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா, நேற்று 16ல் நடந்தது. காலை, 10:30 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரில், உற்சவர் சமயபுரம் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து, கோவிலை சுற்றி இழுத்துவந்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, மாரியம்மனுக்கு, தங்ககவசம் சாத்துதல் உற்சவம், சிறப்பு பூஜை நடந்தது.