Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியை ... மதுரையில் அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்: பக்தர்கள் பரவசம் மதுரையில் அசைந்தாடி வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகருக்கு ஆண்டாள் மாலை!
எழுத்தின் அளவு:
அழகருக்கு ஆண்டாள் மாலை!

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
03:04

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ராமானுஜரைக் காண, மூலஸ்தானத்திலிருந்து ஆண்டாளே வெளியில் வந்து வாரும் அண்ணரே என்று அழைத்தார். பின் ராமானுஜர் அவரிடம், அழகரின் விருப்பத்தை தெரிவித்தார்.


இதையடுத்து ஆண்டாள், தான் சூடிய மாலை, பரிவட்டம், கிளி, ஸ்நான பவுடர் போன்றவைகளை, வடபெரும் கோவிலுடையான் சடகோபன் நம்பி பரம்பரையினர் மூலம், அழகருக்கு கொண்டு போய் சேர்ப்பர் என தெரிவித்தார். அன்று முதல் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் போது, ஆண்டாள் சூடிய மாலையை, மதுரைக்கு கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்தமாலையை அணிந்து அழகர் ஆற்றில் இறங்குகிறார். இம்மாலை செவ்வந்தி, இருவாச்சி,சம்பங்கி, மரிக்கொழுந்து, மருதுபச்சை பூக்களால் கட்டப்படுகிறது. பின் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு , அதை மாடவீதி,கந்தாடை வீதிகள் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆண்டாளுக்கு திருஷ்டி ஏற்படாமலிருக்க, பித்தளை செம்பில் சர்க்கரை, சுக்கு, ஏலம் கலந்த தண்ணீரில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கின்றனர். பின் கூடலழகர் கோயிலில்,மாலைக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடா சலபதிகோயில் ஆஞ்சநேயர் சன்னதியில் இறக்கி வைக்கப்படும். அப்போது அக்கோயிலில் தங்கி இருக்கும் அழகர், அபிஷேகத்திற்கு பின் மேளம், குடை, தீப்பந்தம் போன்றவைகளுடன் ஆஞ்சநேயர் சன்னதிக்கு, அழகரின் பரிவாரங்கள் சென்று, ஆண்டாள் சூடிய மாலை, பரிவட்டம், ஸ்நானப்பவுடர், கிளி போன்றவைகளை அழகருக்கு அணிவிப்பர். பத்தாண்டுகளுக்கு முன் வரை ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு நடந்தே இம்மாலை கொண்டு வரப்பட்டது. தற்போது காரில் கொண்டு வரப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar