நடுவீரப்பட்டு புத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 03:05
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை தெருவில் புதிதாக கட்டப்பட்ட புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 8ல்) நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநயாகர் பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், பிரவேச பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 9:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.நேற்று 8 ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம்
கால யாகசாலை பூஜை, காலை 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:10 மணிக்கு மகா கும்பாபி ஷேகம் நடந்தது.விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.