சிதம்பரம் தில்லை காளிக்கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 03:05
சிதம்பரம்: தில்லை காளிக்கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி, சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று (மே., 9ல்) காலை சிறப்பு வேள்வி மற்றும் யாகம் நடந்தது.தில்லை காளியம்மன்
கோவில் செயல் அலுவலர் ராஜசரவணக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், நுண் புல முதன்மையர் முத்துராமன், இசைத்துறை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓதுவார்கள் பாலசுப்ரமணியன், பாலச்சந்திரன், மாணவிகள் பாவனா, பவ்யா ஆகியோர் மழை வேண்டி பாடல்களை பாடினர்.