Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெத்தநாயக்கன்பாளையம், விநாயகர் ... நாமக்கல் பகவதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2019
04:05

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வைகாசி விசாகத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள
அர்த்தநாரீஸ்வரர், நகருக்கு எழுந்தருளி, திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா, நேற்று (மே., 10ல்) துவங்கியது.

அர்த்தநாரீஸ்வரர்,செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கலச பூஜை செய்த சிவாச்சாரியர்கள், கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும்
மலர்கள் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர். வரும், 13ல் திருமலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு கொடியேற்றம், மதியம், 1:45க்கு பரிவாரங்கள் புடைசூழ திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல், இரவு, 8:30க்கு நாலுகால் மண்டபத்தில்
தீபாராதனை, இரவு, 10:00 முதல், அதிகாலை, 4:00 வரை நான்கு ரத வீதியுலா நடக்கிறது. வரும், 18 அதிகாலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம், காலை, 10:45க்கு மேல்
பவுர்ணமி திதி விசாக நட்சத்திரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், 11:30 மணியளவில் விநாயகர் திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

மே, 19 ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். பின்னர், அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல்; 21 மாலை ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல்; 23ல்,
அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கைலாசநாதர் கோவிலில் இருந்து எழுந்தருளி திருமலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றம், கவியரங்கு, வழக்காடு மன்றங்கள் நடக்கவுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar