சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் பூர்ணா புஷ்கலா சமேத அரிகரபுத்திரசாமிகள் வைகாசி உற்சவம் மற்றும் கும்பாபிேஷகம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலையிலே மூலவர் அரிகரபுத்திர சாமிக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள், திரவியப்பொடி, இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது.பின்னர் உற்சவர்களான பூர்ணா, புஷ்கலா சமேத அரிகரபுத்திரசாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், மாலையில் வைகாசி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.