செஞ்சி: திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது.
செஞ்சி தாலுகா மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி திருக்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது.காலையில் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு மகாலட்சுமி யாகம் நடந்தது. இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.