Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை மாரியம்மன் கோவில் திருவிழா தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை கோலாகலம் தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்கள் மீட்கப்படுமா? பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
02:05

வெள்ளகோவில்:வெள்ளகோவில் வட்டாரத்தில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து, கோவில் நிலங்களை மீட்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெள்ளகோவில் சோளீஸ்வரசுவாமி கோவில், கண்ணபுரம் மாரியம்மன் விக்ரம சோளீஸ் வரசுவாமி, மயில்ரங்கம் வைத்தீஸ்வரன் கோவில், முத்தூர், சோளீஸ்வரசுவாமி கோவில், மாதராயப் பெருமாள்கோவில், உத்தமபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், லக்கம நாயக்கன்பட்டி அழகீஸ்வரசுவாமி, தூரம்பாடி, குலமாணிக்க ஈஸ்வரர் கோவில் உட்பட எட்டு கோவில்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 800 ஏக்கர் புன்செய் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த நிலத்தை தனியார்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் அனைவருக்கும் இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டு விட்டது. தேர்தல் காரணத்தால் மந்த நிலை நீடித்தது. உடனடியாக தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி
வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து புன்செய் நிலம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், எட்டு கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நில ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை தாமாக முன் வந்து கோவில்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நிலங்கள் கையகப்படுத்துவதில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar