விழுப்புரம்:விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று வருண ஜப வேள்வி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
விழாவையொட்டி, கோவிலில் உள்ள நந்திக்கு நேற்று மாலை 6:00 மணி முதல் மந்திரங்களாலும், அனைத்து இசைக்கருவிகள் மற்றும் தேவாரம், திருப்புகழ், திருவாசகம் மூலம் வருண ஜப மந்திரம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.இதில், மஹாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மஹாலட்சுமி பிளாசா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.