மானாமதுரை: மானாமதுரை அருகே கிளங்காட்டூர் எ. நெடுங்குளம் இருளப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 14ல்) நடைபெற்றது. ஜூன் 12ல் கணபதி ஹோமத்துடன் பணிகள் துவங்கின.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று (ஜூன்., 14ல்) காலை 6:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு வேள்வி, பூஜைகள் நடத்தினர்.
கடம் புறப்பாட்டிற்கு பின், இருளப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பி.ஜி., சேம்பர் உரிமையாளர் துபாய் காந்தி குடும்பத்தினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.