* இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் மனிதர்களை நேசியுங்கள். அப்போது தான், இறைவனின் நேசம் கிடைக்கும். * ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவனும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான். * உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள். இவ்வாறு செய்வது மனதிலுள்ள பொறாமையை அழித்து விடும். * கெட்டவர்களுடன் நட்பு கொள்ளாதீர். அவ்வாறு செய்தால் அவர்களின் கணக்கில் நீங்களும் சேர்வீர்கள். * நண்பரிடத்தில் சிறந்தவராக நடப்பவரே இறைவனுக்கு பிடித்தமானவர். * நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஏனெனில் ஒருநாள் அவர்கள் விரோதிகளாகக் கூடும். விரோதிகளை பகைக்காதீர். ஒருநாள் அவர்கள், தோழராகக் கூடும்.