திருக்கனூர்: வாதானூர் திரவுபதியம்மன் கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று (ஜூலை., 9ல்) நடந்தது.
அதையொட்டி, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதணை நடந்தது. மதியம் 12:30 மணிக்கு பாஞ்சாலி- அர்ச்சுனன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.