வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2019 02:07
வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று (ஜூலை., 9ல்) துவங்கியது. வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று (ஜூலை., 9ல்) காலை 10:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெறும்.
வரும் 12ம் தேதி இரவு கருட சேவை, 14ம் தேதி இரவு வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், 16ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.