Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மே.2ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்! திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா: மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவக்கம்! திருப்பரங்குன்றம் பங்குனித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டயபுரத்தில் முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மார்
2012
11:03

தூத்துக்குடி:  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் 238வது ஜெயந்தி விழா, எட்டயபுரத்தில் வரும் 26, 27ல் நடக்கிறது. 1775ல், திருவாரூரில் ராமசாமி தீட்சிதர், சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் முத்துசுவாமி தீட்சிதர். முதலில் தந்தையிடம் சங்கீதம் பயின்ற இவர், பின் சிதம்பரம் நாதயோகியிடம் சீடராகி சங்கீதம் கற்றார். தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கினார்.குருவின் அருளால், கங்கையில் இருந்து, "ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட வீணை ஒன்றைப் பெற்றார். இதை தீட்சிதரின் ஆறாவது தலைமுறையினர் பாதுகாத்து வருகின்றனர். திருத்தணி கோவிலில் வயதான ஒருவரைப் போல முருகன் நேரில் தோன்றி, தீட்சிதரின் வாயில் கற்கண்டை போட்டு மறைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தன் முதல் கீர்த்தனையான, "ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதியைப் பாடினார். திருத்தணி, மதுரை, திருப்பதி உள்ளிட்ட 26 திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியுள்ளார். முருகன், அம்பிகை, சிவன், ராமர் மீது 437 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.எட்டயபுரத்தில் தீட்சிதர், "ஆனந்த அம்ருதகர்ஷினி என்ற கீர்த்தனையைப் பாடி மழையை வரவழைத்தார். 1976ல் இந்திய அரசு, இவரது நினைவாக தபால் முத்திரை வெளியிட்டது. 22 ஆண்டுகளாக சென்னை சரஸ்வதி வாக்யக்கார டிரஸ்ட் நிர்வாகி சுப்பிரமணியன், ஆண்டுக்கு இருமுறை பிரபல வித்வான்களை எட்டயபுரத்திற்கு வரவழைத்து, முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். 238வது ஜெயந்தி விழா, மார்ச் 26 காலை, 9மணிக்கு எட்டயபுரம் தீட்சிதர் நினைவு மண்டபத்தில் துவங்குகிறது. நல்லி குப்புசாமி செட்டியார் முன்னிலையிலும், சென்னை தியாக பிரம்ம சபா செயலர் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலும் விழா நடக்கிறது. மார்ச் 26, காலை 9.30 முதல் 12 மணி வரை சென்னை பாலபிருந்தம் சங்கீத குருகுலம் சார்பாக தீட்சித வைபவ நிகழ்ச்சியும், மார்ச் 27 காலை 9.30 முதல் 12 மணி வரை சீதாராஜன் குழுவினரின் நாதயோகின் நமஹ நிகழ்ச்சியும் நடக்கின்றன. தொடர்ந்து சங்கீதக் கலைஞர்கள் பாடுகின்றனர்.முத்துசுவாமி தீட்சிதர் நினைவு கமிட்டி செயலர் ராஜகோபால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar