மதுரையில் ஜூலை 17 ல் சந்திர கிரகணம் மீனாட்சி கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 02:07
மதுரை:சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 22 துணை கோயில்களின் நடை நாளை (ஜூலை 16) மாலை 6:30 மணி முதல் ஜூலை 17 அதிகாலை 4:30 மணி வரை சாத்தப்பட்டிருக்கும். சந்திர கிரகணம் நாளை இரவு 1:32 மணிக்கு துவங்கி அதி காலை 4:30 மணிக்கு முடிகிறது.
இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை நாளை மாலை 6:30 மணிக்கு சாத்தப்பட்டு அம்மன், சுவாமி மூலஸ்தானம் பலகனி கதவுகளால் அடைக்கப்படும். அந்த நேரத்தில் பக்தர்கள் அம்மன், சுவாமிக்கு அர்ச்சனை, தரிசனம் செய்ய இயலாது.
கிரகணம் ஜூலை 17 அதிகாலை 4:30 மணிக்கு முடிந்ததும் தீர்த்தம் வழங்கப்பட்டு அம்மன், சுவாமி சன்னதிகளில் கிரகண கால அபிஷேகம், சந்திரசேகர் இரண்டாம் பிரகாரம்புறப்பாடு நடக்கும்.
ஜூலை 17 அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்து காலை பூஜைகள் வழக்கம் போல் நடக்கும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.