பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
02:07
பழநி:பழநி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
பழநி பெரியாவுடையார் கோயிலில் பிரதோஷவேளையில் நந்திபகவான், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.இடும்பன்கோயிலில் சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், திருவுலா நடந்தது.
* கன்னிவாடி:பிரதோஷத்தை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட் களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திருவாசக பாராயணத்துடன், உற்ஸவர் பிரகார வலம் நடந்தது. விழாவில், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
* சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.