பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
03:07
திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா வரும் ஜூலை 26 ல் துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.
ஆடித்திருவிழா ஜூலை 26 ல் காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 5:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6:00 மணிக்கு விசேஷ பூஜை, 6:30 மணிக்கு அம்மன் வீதியுலா ஆரம்பமாகும்.
வீதியுலா திண்டுக்கல் மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு, காமராஜபுரம், மவுன்ஸ்புரம், தாடிக் கொம்பு ரோடு முதல் நந்தவனம் ரோடு வரை, பள்ளிவாசல் தெரு, கிழக்கு கோவிந்தாபுரம், அண்ணாநகர், விவேகானந்தா நகர் ஆகிய தெருக்களில் வரும். தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க மண்டபம், நாராயண அய்யர் கல்யாண மண்டபம், மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோயிலில் இரவு தளிகை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
மேலும் அம்மன் வீதியுலா மிக குறுகலான, சுகாதாரமற்ற பாதை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. வீதியுலா வரும் தெருக்கள் விபரம் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. பந்தல் அமைத்த இடத்தில் தான் திருக்கண் நடத்த இயலும். போலீசார் உத்தரவின் பேரில் இரவு 12:00 மணிக்குள் வீதியுலா முடிக்க வேண்டும் என்பதால் முக்கிய வீதிகளில் மட்டுமே வீதியுலா நடக்கும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பரம்பரை நிர்வாக அறங்காவலர் சுபாஷினி தெரிவித்தார்.