சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி சனிவார பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. குச்சனுார் சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது.இங்கு ஆடி சனிவார திருவிழா 5 வாரங்கள் நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று பகல் 12:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால்முத்து கொடியேற்றினார். முன்னதாக பூலாநந்தபுரம் மாரைய நாயக்கர் வகையறாவினர், கோயில் வளாகத்தில் புனிதநீர் தெளித்து கலிப்பணம் கழித்தனர். சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.