பதிவு செய்த நாள்
21
ஜூலை
2019
12:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில், ஆடிப்பூர விழா, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள, ஆண்டாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நடப்பாண்டிற்கான, ஆடிப்பூர விழா, 27ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 4ம் தேதி காலை, 8:05 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.விழா நாட்களில், ஆடிப்பூர பந்தலில் சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.