மூங்கில்துறைப்பட்டு அருகே ஆதிமுத்து மாரியம்மனுக்கு தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2019 02:07
மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே நரிக்குறவர் காலனியில் உள்ள ஆதிமுத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் தீமிதி திரு விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று (ஜூலை., 23ல்) காலை தென்பெண்ணையாற்றிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து வந்தனர்.
மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. காமராஜ் நகரில் உள்ள இளங்கருமாரியம்மன், ரங்கப்பனுார் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நேற்று (ஜூலை., 23ல்) மதியம் சாகை வார்த்தல் நடந்தது.