பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 04:08
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் விழுப்புரம் மாவட்ட வீரசைவ சிவஞானியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று முன்தினம் (ஜூலை., 30ல்) இரவு சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.
விழாவையொட்டி, நேற்று (ஜூலை., 31ல்) மாலை 4:30 மணிக்கு இடபகொடி ஏற்றுதல், மாலை 5:30 மணிக்கு இட்டலிங்க ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு திருமஞ்சன ஆராதனை வழிபாடுகள், திரு முறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது.இரவு 7:00 மணிக்கு திருநீற்று பிரசாதம் வழங்குதல், இரவு 7:30 மணிக்கு அடியார்களுக்கு திருஅமுது படைத்தல், இரவு 8:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.