பதிவு செய்த நாள்
01
ஆக
2019
04:08
விருத்தாசலம் : விருத்தாசலம் பாலாஜி நகர், முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், பாலாஜி நகர் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் (ஜூலை., 30ல்) மாலை 5:30 மணியளவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளியதும், 108 சுமங்கலி பெண்கள் விளக்கு பூஜை செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாளை 2ம் தேதி காலை 10:30 மணி யளவில் செடல் திருவிழா, மாலை 4:00 மணிக்கு கஞ்சி வார்த்தல், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடக்கிறது. 3ம் தேதி காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராட்டு, 4ம் தேதி கும்ப பூஜையுடன் விழா நிறைவடைகிறது.