Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்மிடிப்பூண்டி தேவி கருமாரி ... திம்மராஜாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு ரூ.1 கோடியில் சீரமைக்க அதிகாரிகள் திட்டம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு ரூ.1 கோடியில் சீரமைக்க அதிகாரிகள் திட்டம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
02:08

விழுப்புரம்: விழுப்புரத்தில் அழிந்து வரும் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க, முதல்வர் அறிவித்த நுாற்றாண்டு விழா வளர்ச்சி நிதியில் ஒரு கோடி ரூபாயை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே, ஆதிவாலீஸ்வரர் கோவில் அருகே 2 ஏக்கர் அளவில் குளம் இருந்தது. இந்த குளம் விழுப்புரம் நகரின் மையப் பகுதியின் பெரும் நீர் ஆதாரமாக இருந்து வந்தது.இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும்போது அருகில் உள்ள வீடுகளின் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர் ஊற்றுகள் அதிகமாக இருந்தன. இங்கு குறைந்த அளவு ஆழத்தில் போர்வெல் அமைத்தாலே அதிகளவில் தண்ணீர் கிடைத்தது.

ஆனால், இக்குளம் கடந்த பல ஆண்டுகளாக குப்பை மற்றும் கட்டட இடிபாடு கழிவுகள் கொட் டும் இடமாக மாறி விட்டது. மிகப்பெரிய குளமாக இருந்தது, தற்போது குட்டையைவிட சிறிய அளவில் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், நாளடைவில் இங்கு குளம் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.குளம் மறைந்து வருவதால், மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அதன் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனது. நகரின் நீர் ஆதாரத் தை பாதுகாக்க இக்குளத்தை துார்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நுாற்றாண்டு விழா காணும் விழுப்புரம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, சட்ட சபையில், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அந்த நிதியில் விழுப்புரம் நகராட்சியில் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில், ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி, ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.அதன்படி, இந்த குளத்தின் பழைய அளவிற்கு, துார்வாரப்பட உள்ளது.

இதில் கரை அமைத்து, படிக்கட்டுகள் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும், குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர், மின் விளக்கு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்ய ப்பட உள்ளது.இதன் மூலம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் மீண்டும், புதுப்பொலிவு பெறுவ தோடு, மழைநீர் சேமிக்கப்பட்டு அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.குளங்களை மீட்க வேண்டும்விழுப்புரம் நகராட்சி எல்லையில், கே.கே., ரோடு, திரு.வி.க., சாலை, சந்தனகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற் பட்ட குளங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பில் சிக்கி குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது. நகராட்சி பதிவேட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar