Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பெரும்பாக்கத்தில், ... அன்னுார் மாரியை பொழிபவளே... மாரியம்மா! அன்னுார் மாரியை பொழிபவளே... மாரியம்மா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் குளம் தூர் வாரப்படுமா? பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில் குளம் தூர் வாரப்படுமா? பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
02:08

மேற்கு மாம்பலம்:கோதண்டராமர் கோவில் குளத்தை சீரமைத்து, தண்ணீர் தேங்க  வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்கு மாம்பலத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்,  கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே கோவில் குளம்  உள்ளது.இந்த குளம் முறையான பராமரிப்பின்றியும், பல ஆண்டுகளாக துார்  வாரப்படாமலும் உள்ளது. இதனால், புதர்மண்டி காட்சியளிக்கிறது. குளத்தின்  நீர்வரத்து கால்வாயும், முற்றிலும் மறைந்து விட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் தேங்கி நின்ற குளம், தற்போது, தண்ணீர்  இன்றி வறண்டு காணப்படுகிறது.அத்துடன் குளத்தை சுற்றி உள்ள சுற்றுச்சுவர்,  பல இடங்களில் சரிந்தும், குளத்தின் கதவு உடைந்தும் உள்ளதால், சமூக  விரோதிகள் குளத்தை தங்கள் புகலிடமாக மாற்றி உள்ளனர்.குளத்தை சுற்றி  குப்பை கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், குளத்தை சீர்செய்து, மழைநீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என, கோரிக் கை எழுந்துள்ளது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.சுந்தர்  ராஜன், 82, என்பவர் கூறுகையில், ”எங்கள் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை,  குளத்தில் இணைக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை  கோரிக்கை வைத்தோம்.எந்த நடவடிக்கையும் இல்லை. குளத்தில் தண்ணீர்  தேங்கினால், சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயரும்,” என்றார்.

இது குறித்து, கோதண்டராமர் கோவில் அதிகாரிகள் கூறுகையில், ’சில  தன்னார்வலர் அமைப் புகள், வரும் ஞாயிறு குளத்தை சுத்தம் செய்ய உள்ளனர்.  இந்த பணிகள், இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. விரைவில்  குளத்தை சீரமைத்து விடுவோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar