திருவாடானை:திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (ஆக.5) திருக்கல்யாணம் காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. மறுநாள்சுந்தரர் கயிலாய காட்சியும், சிறப்பு மேளக்கச்சேரி, கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.இன்று காலை 9:30 மணிக்கு அம்பாள் தவசும், வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.