கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சுப்ரமணியர் கோவிலில், நேற்று முன்தினம் (ஆக., 6ல்) காலை 8:00 மணியளவில், சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.அதேபோல், விளக்கப்பாடி, விருத்தகிரிகுப்பம், ஊ.மங்கலம் எலுமிச்சை, சி.கீரனுார் சுப்ரமணியர் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.