கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவிலில், நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கடலுார், பாதிரிக்குப்பம் குலசேகர அம்மாள் நகரில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் கோவிலில் 3ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை யொட்டி, நேற்று 2ல் மாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.