பதிவு செய்த நாள்
09
செப்
2019
02:09
பரங்கிப்பேட்டை: சம்மந்தம் கிராமத்தில், உமையபார்வதி சமேத மூலநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (9ம் தேதி) நடக்கிறது.பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் உள்ள உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான 18 சித்தர்கள் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (9ம் தேதி) காலை 7 மணிக்கு மேல் 8; 30 மணிக்குள் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி, முதல் கால பூஜையும், நேற்று (8ம் தேதி) இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை மற்றும் ஐந்தாம் கால பூஜை நடந்தது.
கும்பாபிஷேகத்தினமான இன்று (செப்., 9ல்) காலை 4;00 மணிக்கு ஆறாம் கால பூஜை நடக்கிறது. கடம் புறப்பாடாகி, காலை 7:00 மணிக்கு மேல் 8;30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், எம்.எல்.ஏ., பாண்டியன், டி.எஸ்.பி., கார்த்திகேயன், ஓய்வு பெற்ற சுங்கவரித்துறை துணை ஆணையர் அருணாச்சலம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை, அகஸ்தியம் பவுண்டேஷன் நிர்வாகிகள், அகஸ்தியம் ஈஷ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஷ்வர், லோக்நாத் ஈஷ்வர், ரிஷிநாத் ஈஷ்வர், பெருமாள் ராஜலிங்கம், சக்திவேல் தணிகாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.