Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோவிலில் தீபாவளி ... பகவதி அம்மன் வழிபாடு கட்டணம் உயர்த்த முடிவு பகவதி அம்மன் வழிபாடு கட்டணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17.6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு
எழுத்தின் அளவு:
17.6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன லட்டு

பதிவு செய்த நாள்

13 செப்
2019
11:09

திருப்பதி: ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஐதராபாதில் விநாயகர் சதுர்த்தி மிகவும் புகழ் வாய்ந்த திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தி நாள் முதல் அடுத்த 11 நாட்களுக்கு நகரின் ஒவ்வொரு மூலையிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை தரிசனம் செய்யலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மிகவும் உயரமான விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜிப்பதே ஆகும்.

கடந்த 1954ம் ஆண்டில் சுதந்திரப்போராட்ட தியாகி சங்கரையா கைரதாபாத்தில் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை நிறுவி அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது முதல் கைரதாபாத் விநாயகர் சதுர்த்தி உற்ஸவ குழுவினர் முந்தைய ஆண்டு நிறுவப்பட்டதை விட உயரமான சிலையை நிறுவி பூஜித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 60 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்த ஆண்டு அதை விட உயரமான சிலையை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் 61 அடி உயரத்துடன் 12 தலைகள் 24 கைகளுடன் கூடிய மிக பிரமாண்டமான விநாயகர் சிலை கைரதாபாத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி உற்ஸவம் முடிவுக்கு வந்ததால் கைதராபாத் கணபதியை நேற்று செகந்திராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைப்பதற்காக விநாயகர் சதுர்த்தி உற்ஸவ குழுவினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மற்றொரு நிகழ்வாக ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலப்பூர் கணபதி லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar