திருக்கழுக்குன்றம் - தாழக்கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதத்துக்கே அபிஷேகம் நடைபெறுகிறது. நவராத்திரி இறுதி நாளில் ஒன்று, ஆடிப்பூர நாளில் ஒன்று, பங்குனி உத்திர திருநாளில் ஒன்று என வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் அம்பாளுக்கு முழு அபிஷேகம். இந்த அபிஷேகத் தீர்த்தம் கண் நோய்களை நீக்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை!