ஒருநாள் கடைக்குச் சென்ற ஜோசப்புடன், அவர் மகள் மேரி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள். தந்தையின் கையை பற்றிக் கொள்வதில் மகளுக்கு மகிழ்ச்சி. ”அப்பா! இப்போது ’பார்வையற்றவரும் வழிகாட்டியும்’ என்னும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டே போவோமா?” எனக் கேட்டாள். அவரும் சம்மதித்தார். ”இப்போது நான் தான் பார்வையற்றவள்; நீங்கள் தான் எனது வழிகாட்டி! என் கையை இறுகப் பிடியுங்கள்” என்றாள். தந்தையும் பிடிக்க, கண்களை மூடிய படி நடந்தாள். ”படிக்கட்டில் ஏறுகிறோம். நடுவில் கல் கிடக்கிறது. இடது பக்கம் திரும்பலாம்” என்றெல்லாம் வழிகாட்ட மகளும் கூட வந்தாள். வீட்டுக்கு வந்ததும் தாயிடம், ” நானும் அப்பாவும் விளையாடிபடி வந்தோம்” என்று சொல்லி மகிழ்ந்தாள். ”எங்காவது விழுந்து விடுவோம் என்ற பயம் உனக்கு இல்லையா?” எனக் கேட்டாள் தாய். ”இல்லையே! என்னை கெட்டியாக அப்பா பிடித்துக் கொண்டார். என் கால் தடுமாறாமல் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்” என்றாள். ”நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்! பார்வையினால் அல்ல!”