நடுவீரப்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் சம்பஸ்ரா பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2019 12:09
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் செல்வ விநாயகர் கோவிலில் சம்பஸ்ரா பூஜை நடந்தது. சி.என்.பாளையம் பழையபாளையம் தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து ஒராண்டு நிறைவை முன்னிட்டு சம்பஸ்ரா பூஜை நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 17ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு யாக வேள்வியில் வைத்திருந்த கலசங்கள் ஆலய உலாவாக வந்து செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 7:30 மணிக்கு செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.