சிவனுக்குரிய நாள் திங்கட்கிழமை, அந்நாளில் சோமவார விரதம் இருந்து பக்தர்கள் சிவனை வழிபடுவார்கள். ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் செவ்வாய்க்கிழமைதான் விசேஷநாள். ஏனெனில் திருவண்ணாமலை அக்னி மலையாகும். அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு எனப்பொருள். அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரகன் எனப்படும் செவ்வாய், எனவே இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ பூஜை நடக்கும். அன்று அண்ணாமலையாரை வழிபட்டு பிறவிப்பிணியில் இருந்து நீங்கலாம்.