பதிவு செய்த நாள்
03
அக்
2019
03:10
பல்லடம்:பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. நேற்று, அம்பிகையே நாயகி எனும் தலைப்பில் ஞானபாரதி அனந்தகிருஷ்ணன் பேசிய தாவது:
இந்துக்களின் விரதங்களில் மிகவும் சிறப்பு மிக்கது நவராத்திரி. முதல் மூன்று நாட்கள் வீரத்துக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்துக்கும், அதற்கடுத்த மூன்று நாட்கள் கல்வி க்கு மாக கொண்டாடப்பட வேண்டும். கொலு வைக்கும் பழக்கமானது, நம் முன்னோர்கள் காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கொலுவில், கடவுளின் திருவுருவங்கள் மட்டுமன்றி, விவசாயி, நெசவாளி, காவலாளி, மருத்துவர், உயிரினங்கள் மற்றும் குடும்பம் உள்ளிட்ட அனைத்து பொம்மைகளும் இடம்பெற்றிருக்கும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அதற்கு அர்த்தம், கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதாகும்.கொலுவில் வைத்திருக்கும் பொம்மைகள் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும். அதை பார்க்கும் குழந்தைக ளுக்கு, நவராத்திரியின் சிறப்புகள் குறித்து நாம் அறிவுறுத்த வேண்டியது அவசியம். விரதங் களும் அவற்றின் பலன்கள் குறித்தும் குழந்தைகளுக்கு கூற வேண்டியது பெற்றோரின் கடமை.இவ்வாறு அவர் பேசினார்.