மதுரை:மதுரையில் மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.தலைவர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், இயற்கை விவசாயி பாலகார்த்திகேயன், பேச்சாளர் சிதம்பரபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மீனாட்சி அம்மன் கோயில் காந்தி சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி மேல ஆடி வீதியில் முடிந்தது.