பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
மதுரை:வாடிப்பட்டி அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி அக்.,29ல் நடக்கிறது. தக்கார் ஜெயதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: குருபெயர்ச்சி விழா அக்.,26 காலை 10:35 மணிக்கு லட்சார்ச்சனையுடன் துவங்குகிறது. அக்.,27 காலை 8:00 மணிக்கு மூன்றாம் கால லட்சார்ச்சனை துவங்கி இரவு 8:00 மணி வரை, அக்.,28ல் காலை 8:00 மணிக்கு ஐந்தாம் கால லட்சார்ச்சனை துவங்கி பகல் 12:00 மணி வரை நடக்கிறது. அக்.,29 குருபெயர்ச்சி இரவு 1:30 மணிக்கு துவங்கி 3:49 மணிக்குள் பரிகார மகாயாகம், திருமஞ்சனம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அர்ச்சனை நடக்கிறது. குருபெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுஉள்ளன என்றனர்.