பதிவு செய்த நாள்
08
அக்
2019
03:10
புதுச்சேரி; பாலா திரிபுரசுந்தரி கோவிலில் ஆயுதபூஜையையொட்டி, அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.வானுார் அடுத்த இரும்பை கிராமம், டோல்கேட் அருகில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 29ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது.விழாவையொட்டி, தினமும் மாலை6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது.முதல் நாள், குமரன் கலைக்கூடம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும் பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று ஆயுத பூஜையையொட்டி, அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, தமிழ் நாட்டியாலயாவின், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.இன்று, 8ம் தேதி நாதஸ்வர கச்சேரியும், நாளை 9ம் தேதி, நட்டம் பயின்றாடும் நாதன் இசைத்திருக்கூட்டம், கைலாய வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது.