பதிவு செய்த நாள்
12
அக்
2019
01:10
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சீனிவாச பெருமாள் கோயிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு, திருமஞ்சன அபிசேகம், 6:30 மணிக்கு அலங்கார பூஜை, 9:00 மணிக்கு அச்சம்பாளையம், சண்முகம் குழுவின் பஜனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பொங்கலுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், காலை 7:00 மணிக்கு பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஓரைக்கால்பாளையத்தில், பழமையான ராமர் கோவிலில், அதிகாலையில் 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. செம்மாணி செட்டிபாளையம், ராயர் கோவிலில், காலை 5:30 மணிக்கு துவங்கி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.