சமுதாயத்தில் அக்கிரமம், அநீதியில் ஈடுபடுபவன் ஆயுதங்களுடன் வந்தால் மக்கள் பயந்தோடுகின்றனர். தீயவர்களைக் கண்டு பயப்படுபவர்கள் கெட்டவர்கள். ஒருவனின் தீங்கான செயலுக்கு பயந்து யார் மரியாதை கொடுக்கிறார்களோ, அவர்கள் மகா கெட்டவர்கள். எனவே அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும். அக்கிரமம் செய்பவன் தன்னையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறான். ஆனால் அதை அவன் உணர்வதில்லை. நிச்சயம் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான்.