பதிவு செய்த நாள்
28
அக்
2019
05:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழா காலை துவங்கியது. 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, கடஸ்தாபனம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மஹா பூர்ணாகுதி, சுவாமிக்கு லட்சார்ச்சனை, உற்சவர் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 7 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 2ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், 3ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.