Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டமங்கலம் கோயிலில் குருபெயர்ச்சி ... குரு பெயர்ச்சி பரிகார மஹா யாகம் குரு பெயர்ச்சி பரிகார மஹா யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமையான கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமையான கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

30 அக்
2019
12:10

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள, கடத்துார் கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழமன்னர்கள் ஆட்சி எல்லை கொங்கு மண்டலம் வரை பரவியிருந்தது. இந்த காலகட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டு, அதனை சார்ந்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கடத்துார், காரத்தொழுவு, கொமரலிங்கம், கொழுமம் உள்ளிட்ட பல கிராமங்களில் கற்களை மட்டும் பயன்படுத்தி அமைத்த இந்த கோவில்கள் கற்றளி என சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது.

மடத்துக்குளம் தாலுகா கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், இந்த கற்றளி முறையில் கொங்கனேசுவரர் கோவில் கட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வந்தனர். ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, போதிய பராமரிப்பு இன்றி, கட்டடம் சேதமடைந்துள்ளது. பக்கவாட்டு சுவர்களில் கற்கள் விழுந்து விட்டன. சுற்றுச்சுவர் இல்லாததால், சிலைகள் திறந்த வெளியில் உள்ளன. கருவறையில் லிங்கம் மட்டும் உள்ளது. சில சிலைகள் உடைந்து காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், முன்னோர்களின் அடையாளமாக உள்ள கொங்கனேசுவரர் கோவில் பரிதாபமாக காணப்படுகிறது.கோவிலை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். குறுகிய பாதை வழியாக தான் செல்ல முடியும். மன்னர் ஆட்சி முறை, தானங்கள், பூஜைகள் குறித்து கல்வெட்டுக்கள் சிதிலமடைந்துள்ளன. சிறப்பு மிக்க கோவிலை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோயிலில், பரிவேட்டை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar