திருப்புத்துார், :சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நடந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அமர்ந்துஉள்ள ஒரே தலம், பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். நேற்று அதிகாலை 3:18 மணிக்கு குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி யாகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்புடன் வெள்ளி அங்கியில் எழுந்தருளினார். பரம்பரை அறங்காவலர் வீரப்பச்செட்டியார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆலங்குடி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று குருபகவானை வழிபட்டனர்.