Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி கந்த சஷ்டி: சூரனை வதம் ... பழநியில் கந்தசஷ்டி விரதம் வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் சூரசம்ஹார விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
01:11

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கந்த சஷ்டி என்பது, முருகப் பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக் கொண்ட நாள். கந்த சஷ்டியின் பிரதான  நாளான, சூரசம்ஹாரம், நேற்று கோலாகலமாக நடந்தது. 


வடபழநி ஆண்டவர் கோவிலில், அக்., 27ம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அரங்கேறியதுநேற்று மாலை, அம்பாளிடம் வேல் பெற்று,  சூரபத்மனை வதம் செய்ய, முருகப் பெருமான் புறப்பட்டார். இரவு, 7:00 மணிக்கு, சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது.பின், மாமரமாக  மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டனர். இன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை முதல், 7ம் தேதி வரை சுவாமி வீதி புறப்பாடு  நடக்கிறது.


அறுபடை வீடு முருகன்பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ள, அறுபடை வீடு முருகன் கோவிலில், சூரசம்ஹார விழாவான நேற்று காலை, அனைத்து சன்னதிகளிலும் விசேஷ அபிஷேக, அலங்காரம் நடந்தது.தொடர்ந்து, வேல் மாறல் பாராயணம்  நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, முருகப் பெருமான் அலங்காரத்துடன், அம்பாளிடம் வேல் பெற்று, வதத்திற்கு புறப்பட்டார். பின், சூரசம்ஹார விழா நடந்தது. இரவு, முருகப் பெருமான், வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவில், கந்தக்கோட்டம், கந்தாஸ்ரமம், குன்றத்துார், வல்லக்கோட்டை, திருப்போரூர் ஆகிய கோவில்களிலும், சூரசம்ஹர விழா விமரிசையாக நடந்தது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar