Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி ஆறுமுகர் கோவிலில் ... விருதுநகர் முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்ஸவம் விருதுநகர் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

04 நவ
2019
03:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் கந்சசஷ்டி விழா அக்.28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. சுவாமி உள் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. பின் சூரசம்ஹாரம் நிகழச்சி நடந்தது. சூரபதுமனை முருகன் சம்ஹாரம் செய்தார். பின் சுவாமிக்கு சிறப்புஅபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.நேற்று காலை 9:30 அபிேஷகம், அலங்காரம் தீபாரதனை நடந்தது. பகல் 12:00மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி திருமணக்கோலத்துடன் வெளி வீதியுலா நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* ராமநாதபுரம் பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் காலை 10:00 மணிக்குதிருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.  வழிவிடு முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழச்சிநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பரமக்குடி: கந்த சஷ்டி விழாவில் பரமக்குடி முருகன் கோயில்களில், திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 28 ல் இரவு 8:00 மணிக்கு  சுவாமிக்கு காப்பு கட்டுடன்  விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் முருகன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் சக்திவேல் பெற்று, மயில் வாகனத்தில் முருகன் வீதிவலம் வந்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு வைகை கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10:00 மணி முதல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். தொடர்ந்து வேத, மந்திரங்கள் முழங்க முருகன் தெய்வானை திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இரவு புஷ்பக விமானத்தில் வீதிவலம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பாரதி நகர் பால்பண்ணை முருகன் கோயிலில், சூரசம்ஹார நிகழ்ச்சியும், திருக்கல்யாணமும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar