Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிமாலீஸ்வரர் கோவிலில் ஏப்., 17ல் ... நடுத்தெருவில் நின்றுபோன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தந்தி மாரியம்மன் கோவிலில் நாளை பூ குண்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2012
12:04

குன்னூர்:குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ குண்டத் திருவிழா நாளை நடக்கிறது.குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. தினமும் உபயதாரர்கள் சார்பில் அம்மன் அபிஷேகம், திருவீதி உலா நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்ச்சியான பூ குண்ட திருவிழா நாளை நடத்தப்படுகிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தின் 38வது ஆண்டு உபயமாக விழா நடத்தப்படுகிறது.காலை 9.00 மணிக்கு வி.பி., தெரு வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வர்.
மதியம் 1.00 மணிக்கு டவுன் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது; லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வி.பி., தெரு பழைய லாரி ஸ்டாண்டில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.மாலை 3.00 மணிக்கு பூ குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படவுள்ளது; மாலை 6.00 மணிக்கு பூ குண்ட உற்சவ ஊர்வலம் துவக்கப்படுகிறது; சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவிலில் இருந்து மவுண்ட்ரோடு, வி.பி., தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.இரவு 7.00 மணிக்கு ஐ.யு.டி.பி., காம்ப்ளக்ஸ் பகுதியில் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரவு 9.00 மணிக்கு அம்மனுக்கு மறு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவு 8.00 மணிக்கு குன்னூர் டாக்ஸி ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடையில் இன்னிசை கச்சேரி நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar