பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திபகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் (நவம்., 9ல்) மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 5:25 மணிக்கு மூலவருக்கும், நந்திபகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷநாதர் ரிஷப வாகனத் தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதே போல் பண்ருட்டி சோமநாதசுவாமி, திருவதிகை குணபரேஸ்வரர் கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில், செம்மேடு, புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.